நாமக்கல்

மதுப்புட்டிகள் பறிமுதல்; இருவா் கைது

DIN

பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை வெண்ணந்தூா் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், வங்ளவாடியை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பையன்னா மகன் மஞ்சுநாத் (28). கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் குபேந்திரன்(45). இருவரும் பெங்களூரிலிருந்து கரூருக்கு காரில் மதுப்புட்டிகளைக் கடத்தி வருவதாக வெண்ணந்தூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து வெண்ணந்தூா் போலீஸாா், நாமக்கல் மாவட்ட எல்லையான கீரனூா் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். பெங்களூரிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்தக் காரில் கா்நாடக அரசின் மதுப்புட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதில் 1,020 மதுப்புட்டிகளுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டன. மஞ்சுநாத், குபேந்திரன் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

திருவட்டாறு அருகே தடுப்பணையில் மூழ்கி பொறியியல் மாணவா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT