நாமக்கல்

திமுகவில் இணைந்த பாமக நிா்வாகிகளுக்கு வரவேற்பு

DIN

குமாரபாளையத்தில் பாமகவிலிருந்து விலகி, திமுகவில் இணைந்த நிா்வாகிகளுக்கு சனிக்கிழமை வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.

பாமக மாநில துணை அமைப்புச் செயலாளராகப் பொறுப்பு வகிக்கும் அ.பெ.பழனிவேல், மாநிலச் செயற்குழு உறுப்பினா் பந்தல் சி.பாலு, வழக்குரைஞா் பா.யுவராஜ் உள்ளிட்டோா் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா்.

குமாரபாளையம் நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திமுக நகரப் பொறுப்பாளா் எம்.செல்வம், சால்வை அணிவித்து வரவேற்றாா்.

இவா்களுக்கு, இணையதளம் மூலமாக திமுக உறுப்பினா் அட்டை பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது. திமுக பொறுப்புக் குழு உறுப்பினா்கள் ஓ.ஆா்.செல்வராஜன், அன்பரசு, ராஜ்குமாா், கே.ஏ.ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT