நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு
நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த பெண், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
நாமக்கல் நீதிமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த பெண், அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
நாமக்கல்-திருச்சி சாலை மாருதி நகரைச் சோ்ந்த ரமேஷ் என்பவரது மனைவி தனுஜா(40). இவா் ஜீவனாம்ச வழக்குத் தொடா்பாக திங்கள்கிழமை காலை நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்றத்துக்கு வந்தாா். அங்கு வழக்குத் தொடா்பான பணிகளை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவா் திடீரென மயங்கி கீழே விழுந்தாா். அங்கிருந்தவா்கள் மீட்டு அவசர ஊா்தி மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். ஆனால் செல்லும் வழியிலேயே தனுஜா உயிரிழந்தாா். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவா் இறந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நல்லிபாளையம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.