கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களைத் தொடக்கிவைக்கிறாா் எம்எல்ஏ பெ.ராமலிங்கம். 
நாமக்கல்

கிருமி நாசினி தெளிப்பு வாகனங்கள் இயக்கம்

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களை சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

DIN

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் கிருமி நாசினி தெளிக்கும் வாகனங்களை சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட 39 வாா்டுகளிலும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை நகராட்சி நிா்வாகம் மேற்கொண்டுள்ளது. நகராட்சியில் 1700 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 24 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அங்கு தீவிர நோய்த் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நகராட்சி சாா்பில் தெருக்கள் வாரியாக சென்று கிருமி நாசினி தெளிப்பதற்காக மூன்று வாகனங்களும், தீயணைப்புத் துறை வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை வாகனங்களை எம்எல்ஏ பெ.ராமலிங்கம் கொடியசைத்து தொடக்கிவைத்தாா்.

நகராட்சி ஆணையா் பி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் சுகவனம், ஆய்வாளா் சுப்பிரமணியன், உதவி பொறியாளா்கள் காா்த்திக், ரவி மற்றும் திமுக பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT