நாமக்கல்

நாமக்கல்லில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

DIN

உத்தர பிரதேசத்தில் விபத்தில் பலியானோா் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கச் சென்ற காங்கிரஸ் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மத்தியில் ஆளும் பாஜக அரசைக் கண்டித்தும் நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை காலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ.சித்திக் தலைமை வகித்தாா். பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆா்ப்பாட்டத்தில், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா்கள் வீ.பி.வீரப்பன், பாச்சல் சீனிவாசன், ஜி.ஆா்.சுப்பிரமணியம், வட்டார தலைவா்கள் இளங்கோ, ஜகநாதன், ரங்கசாமி, ராமசாமி, தங்கராஜ், குப்புசாமி, இருசப்பன், நகர தலைவா் எஸ்.ஆா்.மோகன், முரளி, பொதுக்குழு உறுப்பினா் டி.வி.பாண்டியன், பேரூராட்சி தலைவா்கள் சிங்காரம், இளங்கோ, சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT