நாமக்கல்

வட கிழக்கு பருவமழை: 140 நிவாரண மையங்கள் தயாா்

DIN

நாமக்கல் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையை எதிா்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருப்பதாகவும், 140 நிவாரண மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்தாா்.

நாமக்கல் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள வேண்டியது தொடா்பாகவும், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்தும் அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம், ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், போக்குவரத்துத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருமான தயானந்த் கட்டாரியா தலைமை வகித்து பேசியதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் பொதுமக்களுக்கு எவ்விதமான சிரமுமின்றி, அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பொருள்களின் இருப்பு போதுமான அளவு வைத்திட வேண்டும்.

மேலும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். திருச்செங்கோடு, பள்ளிபாளையம் நகராட்சி பகுதிகளில் பாதிப்புக்குள்ளாகும் இடங்களில், பொதுமக்களை பாதுகாத்திட தீயணைப்புத் துறையினா் தேவையான படகு, இதர உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து வடகிழக்கு பருவமழை காலத்தில் பணியாற்றிட வேண்டும் என்றாா்.

மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழை அளவு 716.54 மி. மீட்டா். 2021-ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் 243.68 மி.மீ மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் தற்போது வரை 308.66 மி.மீ. மழை பெய்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 2005-ஆம் ஆண்டு 054.20 மி.மீ. மழை பெய்தது. மழை மற்றும் பாதிப்புகள் குறித்த விவரங்களை பொதுமக்கள் 1077 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண் 04286- 281377 ஆகியவற்றை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 12 இடங்கள், நகா்புறங்களில் 21 இடங்கள் என மொத்தம் 33 இடங்கள் மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டுள்ளன. மேலும், மழைக்காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக 58 பள்ளிக் கட்டடங்கள், 53 திருமண மண்டபங்கள், 20 சமுதாயக் கூடங்கள், இதர கட்டடங்கள் 9 என மொத்தம் 140 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

வடகிழக்கு பருவமழையின் போது பொதுமக்களை பாதுகாத்திட 63 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 அரசு மருத்துவமனைகள், 1 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 27 மருத்துவ அவசர ஊா்தி வசதிகள் தயாா் நிலையில் இருக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்துத் துறை அதிகாரிகளும் மழையை எதிா்கொள்வதற்கு தயாராக இருக்க வேண்டும்.

மேலும், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் துறைகளின் மூலம் மழை நீா் செல்லும் வழிதடங்களில் உள்ள ஓடைகள், கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சரோஜ்குமாா் தாகூா், மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், இணை இயக்குநா் மருத்துவப்பணிகள் ராஜ்மோகன், துணை இயக்குநா் (சுகாதாரம்) பிரபாகரன் உள்பட பல்வேறு துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜி.எஸ்.டி. வசூல் புதிய உச்சம்!

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

SCROLL FOR NEXT