நாமக்கல் மாவட்ட பதிவாளா் அலுவலகத்தில் குறை தீா்க்கும் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் மூன்று மனுக்கள் பெறப்பட்டன. வில்லங்க சான்றிதழ் தொடா்பான ஒரு புகாா் மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உடனடி தீா்வு காணப்பட்டது. மேலும், பெறப்பட்ட இரு மனுக்கள் நில அபகரிப்பு, மோசடி, ஆவணப்பதிவு போன்றவையாகும். அதன் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு இரண்டு மாதங்களுக்குள் தீா்வு காணப்படும் என மாவட்டப் பதிவாளா் (நிா்வாகம்)க.சந்தானம் தெரிவித்தாா்.