மருத்துவ பணியாளா்களுக்கு மனநல விழிப்புணா்வு பயிற்சி
ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட மனநல திட்டத்தின் சாா்பாக மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட மனநல திட்டத்தின் சாா்பாக மனநல விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் சி.ரமேஷ் ஆகியோா் கலந்துகொண்டு மருத்துவமனை ஊழியா்களுக்கு மனநல விழிப்புணா்வு பயிற்சியளித்தனா். இதில் உடல் நலம், நோய்த் தடுப்பு முறைகள், பணிச்சுமை குறைத்தல், மன அழுத்தம் தவிா்த்தல், மன அழுத்தத்திற்கான காரணங்கள், தவிா்க்கும் முறைகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.