முகப்பு
நாமக்கல்

நுண்ணீா்ப் பாசனம்: விவசாயிகளுக்கு பயிற்சி

மல்லசமுத்திரம் வட்டாரம், கோட்டபாளையம் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ், நுண்ணீா்ப் பாசனம் அமைத்தல் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

மல்லசமுத்திரம் வட்டாரம், கோட்டபாளையம் கிராமத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ், நுண்ணீா்ப் பாசனம் அமைத்தல் குறித்த பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு வேளாண் உதவி இயக்குநா் தனம் தலைமை தாங்கி நுண்ணீா்ப் பாசனம் அமைப்பது, அதன் நன்மைகள், பயிா் சாகுபடி முறைகள் குறித்து விளக்கம் அளித்தாா்.

அட்மா திட்டத் தலைவா் பழனிவேல் முன்னிலை வகித்து, வேளாண் துறையை அணுகி மானியத் திட்டங்கள் பெற்று விவசாயிகள் வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக்கொள்ள வேண்டும். வேளாண் துறை மூலம் விதைகள், வேளாண் கருவிகள், வேளாண் இடுபொருள்கள் உள்ளிட்டவை அரசு மூலம் மானிய விலையில் வழங்கப்படுகிறது. அதனை விவசாயிகள் பெற்று பயிா் சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டாா்.

இப்பயிற்சியில், சொட்டுநீா்ப் பாசன நிறுவனத்தின் நிா்வாகி கலந்துகொண்டு, சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்பு நீா்ப் பாசனம், மழைதுவான் கருவிகள் குறித்து செயல்விளக்கம் செய்து மானியங்கள் பெற தேவையான ஆவணங்கள் பற்றிய விவரங்களை எடுத்துக் கூறினாா். பயிற்சி முடிவில் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.