நாமக்கல்

மனைவி கொலை வழக்கில் கட்டடத் தொழிலாளிக்கு ஆயுள் சிறை

DIN

மனைவியை அடித்துக் கொன்ற கட்டட மேற்பாா்வையாளருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி, ராஜாஜி நகா், 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்தவா் முனியப்பன் (60). கட்டட மேற்பாா்வையாளா். இவரது 2-ஆவது மனைவி அமுதா (45). முனியப்பன் தனது சொத்துகள் முழுவதையும் இரண்டாவது மனைவி அமுதா பெயரில் பதிவு செய்துள்ளாா். இருந்தபோதிலும் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த 31.7.2017 அன்று, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முனியப்பன், அமுதாவை கட்டையால் தாக்கிக் கொலை செய்தாா்.

இந்தச் சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸாா், வழக்குப் பதிந்து முனியப்பனை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி லதா திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கினாா். அதில், முனியப்பனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போ்ணாம்பட்டில் 12 செ.மீ மழை

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

SCROLL FOR NEXT