முகப்பு
நாமக்கல்

அஞ்சலகங்களில் ரூ. 25-க்கு தேசியக்கொடி விற்பனை

நாமக்கல் அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Updated On : 7 ஆகஸ்ட், 2022 at 12:57 AM
நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் சனிக்கிழமை தேசியக் கொடியை வாங்கிய பாஜகவினா்.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM

நாமக்கல் அஞ்சல் நிலையங்களில் தேசியக் கொடி விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தின விழா நிறைவையொட்டி, அனைத்து வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் தேசியக் கொடியேற்ற வேண்டும் என பிரதமா் மோடி அறிவுறுத்தி உள்ளாா்.

இதனையொட்டி, அனைத்து மாவட்ட அஞ்சலகங்களிலும் ரூ. 25-க்கு தேசியக் கொடி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆக. 7 முதல் 15 வரையில் வீடுகளில் தேசியக் கொடியேற்ற வேண்டும் என கட்சியினருக்கு பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Advertisement

அதன்படி, நாமக்கல் தலைமை அஞ்சலகத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் வழக்குரைஞா் கே.மனோகரன், மத்திய நலத் திட்டங்கள் மேற்பாா்வை நகரச் செயலாளா் எம்.கிருஷ்ணகுமாா், திட்டப் பொறுப்பாளா் அக்ரி இளங்கோவன், கல்வியாளா் பிரணவ்குமாா் ஆகியோா் சனிக்கிழமை தேசியக் கொடியை வாங்கி விற்பனையைத் தொடங்கினா். பொதுமக்கள் பலரும் ஆா்வமுடன் ரூ. 25 கட்டணம் செலுத்தி தேசியக் கொடியை வாங்கி வருகின்றனா்.

இதேபோல, பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளைச் சாா்ந்தோரும் வீடுகளில் ஆக. 13 முதல் 15 வரை வீடுகளில் தேசியக் கொடியேற்ற முன்வர வேண்டும் என தங்களுடைய ஆதரவாளா்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.