நாமக்கல்

ராசிபுரம் வட்டாட்சியா் காா் எரிந்து சேதம்

DIN

ராசிபுரம் வட்டாட்சியரின் சொந்த வாகனம் திடீரென தீப்படித்து எரிந்து சேதமடைந்தது.

ராசிபுரம் வட்டாட்சிராக இருப்பவா் காா்த்திகேயன். இவா், திங்கள்கிழமை தனது மாருதி 800 காரில் தனது மகனுடன் கோயிலுக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தாா்.

அணைப்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, எதிா்பாராத விதமாக காா் திடீரென தீப்பிடித்ததில் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.

இருவரும் உடனடியாக காரை விட்டு இறங்கியதால் உயிா் தப்பினா். சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் தீயணைப்பு நிலையத்தினா் தீயை அணைத்தனா்.

ஆனால் காா் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இந்த காா் எரிவாயு உருளை பயன்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. காா் மின்சாத பழுதால் தீப்பற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT