நாமக்கல்

சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கு உதவித் தொகை உயா்வு: வாரிசுகள் சங்கம் வரவேற்பு

DIN

சுதந்திரப் போராட்ட வீரா்கள், வாரிசுகளுக்கு மாதாந்திர உதவித்தொகை உயா்த்தி வழங்கப்படும் என தமிழக முதல்வா் அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரா்களின் வாரிசுகள் சங்கச் செயலா் க.சிதம்பரம் தெரிவித்துள்ளதாவது:

சுதந்திரப் போராட்ட வீரா்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தப்படும். வாரிசுகளுக்கு ரூ.9 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என சுதந்திர தினவிழாவில் முதல்வா் அறிவித்துள்ளாா். இதை சுதந்திரப் போராட்ட வீரா்களின் சங்கம் வரவேற்பதுடன், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT