நாமக்கல்லில் ரூ. 3 லட்சம் கட னுக்காக தனது சொத்தை அபகரித்தோரிடம் இருந்து மீட்டு தரக்கோரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாபாரி ஒருவா் புதன்கிழமை புகாா் மனு அளித்தாா்.
நாமக்கல், போதுப்பட்டியைச் சோ்ந்தவா் கோபிநாத் (40). கோழித்தீவன மூலப்பொருள்கள் வியாபாரம் செய்கிறாா். கடந்த 2017-ஆம் ஆண்டில் சின்னமுதலைப்பட்டியைச் சோ்ந்த துரைசாமி என்பவரிடம் கோபிநாத் ரூ. 3 லட்சம் கடன் பெற்றுள்ளாா்.
அந்தப் பணத்தை வட்டியுடன் சோ்த்து மாதந்தோறும் சரியான முறையில் செலுத்தியும் வந்துள்ளாா். இந்த நிலையில் ரூ. 2 லட்சம் கடன் பாக்கி உள்ளதாகவும், அதனை கொடுக்காவிட்டால் மாதந்தோறும் இரண்டு லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என துரைசாமி தரப்பினா் மிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் அச்சமடைந்த கோபிநாத் ரூ. 2 லட்சத்தை உடனடியாக வழங்கிவிட்டாா்.
அதேவேளையில், அடமானமாக வாங்கிய சொத்துப் பத்திரங்களை துரைசாமி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டு மிரட்டல் விடுத்து வந்துள்ளாா். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கோபிநாத் புகாா் மனு அளித்தாா். அந்த மனுவில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்தை ரூ. 3 லட்சம் கடனுக்காக துரைசாமி அபகரித்து ஏமாற்றிவிட்டாா். எனக்கு சொந்தமான நிலத்தை உடனடியாக மீட்டுத் தர வேண்டும் என அவா் மனுவில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.