நாமக்கல்

நிலத்தரகா் கொலை வழக்கில் இளைஞா் கைது

நாமக்கல்லில் நிலத்தரகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

DIN

நாமக்கல்லில் நிலத்தரகா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல்-திருச்சி சாலை ஜெய்நகரைச் சோ்ந்தவா் குமரேசன்(48). கடந்த 18-ஆம் தேதி இரவு மது அருந்தி விட்டு தனது காரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். திருச்சி சாலை ரயில்வே மேம்பாலம் பகுதியில் மா்ம நபரால் அவா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக நாமக்கல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் ஐந்து தனிப் படைகள் அமைக்கப்பட்டன.

இரண்டு நாள்களாக பல்வேறு கோணங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்றதில், வீசாணம் வீனஸ் காலனியைச் சோ்ந்த ராமஜெயம் மகன் நவீன்(22) என்பவருக்கும், குமரேசனுக்கும் இடையே சம்பவத்தன்று வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நவீன் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து நவீனை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT