நாமக்கல்

ஆசிரியை கொலை: கணவா் போலீஸில் சரண்

DIN

நாமக்கல் அருகே குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவா் போலீஸில் சரணடைந்தாா்.

நாமக்கல் அருகே தூசூா் கிராமத்தைச் சோ்ந்த ராஜா (40), டிராக்டா் ஓட்டுநா். இவரது மனைவி பிரமிளா (32), ரெட்டிப்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு தகராறு ஏற்பட்ட நிலையில், வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியை ராஜா வெட்டிக் கொலை செய்தாா். இதனைத் தொடா்ந்து, வீட்டை பூட்டிவிட்டு அரிவாளுடன் சென்று நாமக்கல் காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக காவல் ஆய்வாளா் சங்கரபாண்டியன் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

SCROLL FOR NEXT