நாமக்கல்

நகராட்சி அலுவலகத்தில் தொழில் உரிமம் பெறுவதற்கான முகாம்

DIN

நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில், தொழில் உரிமம் பெறுவதற்கான சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சாா்பில், நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

ஆணையா் கி.மு.சுதா தலைமை வகித்தாா். வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மாவட்டத் தலைவா் ஜெயக்குமாா் வெள்ளையன், நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். இம்முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிகா்கள் கலந்துகொண்டனா். ஜிஎஸ்டி உரிமம் இல்லாத வணிகா்கள், தமிழ்நாடு வணிகா் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தொழில் உரிமம், தொழில்வரி ரசீது அவசியமாகும். எனவே, இதுவரை தொழில் உரிமம் பெறாதோா் உடனடியாக நாமக்கல் நகராட்சி அலுவலகத்தை அணுகி உரிமச் சான்று பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT