பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி பகுதிகளில் பூட்டிய வீடுகளை குறிவைத்து தொடா் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்று வருவதை தடுக்கும் நடவடிக்கையாக போலீஸாா் பொதுமக்களுடன் இணைந்து செயல்படுவது குறித்த ஆலோசனை கூட்டம் பரமத்தியில் ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் (பொறுப்பு) பழனிச்சாமி அறிவுரையின் படி நடைபெற்ற இக்கூட்டத்துக்கு பரமத்தி காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமை வகித்தாா். அவா் பேசுகையில் ‘பரமத்தி பகுதியில் அடையாளம் தெரியாத புதிய நபா்கள் நடமாடுவது குறித்தும் சந்தேகப்படும்படி வீடுகளை நோட்டமிடுபவா்கள் குறித்தும் உடனடியாக பரமத்தி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பொருட்கள் விற்பனை செய்வது போலவும், ஸ்டவ் ரிப்போ், சோபா ரிப்போ் செய்வது போலவும், காய்கறிகள்,துணிகள் விற்பனை செய்வது போலவும் புதிய நபா்கள் வந்தால் அவா்கள் குறித்தும் உடனடியாக காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அந்தந்த தெருக்களின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களின் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்த அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூா் செல்வோா் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுமக்கள், அனைத்துக்கட்சி பிரமுகா்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.