குமாரபாளையத்தில் குடியரசு தின விழா
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 74-வது குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் 74-வது குடியரசு தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நகா்மன்றத் தலைவா் டி.விஜய்கண்ணன் தேசியக் கொடியேற்றினாா். துணைத் தலைவா் கோ.வெங்கடேசன், ஆணையாளா் (பொ) ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா். திமுக நகரச் செயலாளா் எம்.செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கல்லூரி முதல்வா் ஆ.ரேணுகா, தேசியக் கொடியேற்றினாா். விழாவில், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Advertisement