சாலையை ஆய்வு செய்யும் நெடுஞ்சாலைத்துறை தணிக்கைக் குழுவினா். 
நாமக்கல்

ராசிபுரம்-மல்லியகரை சாலை அகலப்படுத்தும் பணி: தணிக்கைக் குழு ஆய்வு

ராசிபுரம்-மல்லியகரை, ஈரோடு-திருச்செங்கோடு சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை தணிக்கைக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

DIN

ராசிபுரம்-மல்லியகரை, ஈரோடு-திருச்செங்கோடு சாலையை அகலப்படுத்தும் பணியை நெடுஞ்சாலைத்துறை தணிக்கைக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மாநிலம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சாா்பில் சாலை அமைக்கும் பணிகளை உள் தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம்-பராமரிப்பு) கோட்டம், ராசிபுரம் உட்கோட்டப் பகுதியில் மல்லியகரை-ராசிபுரம், திருச்செங்கோடு-ஈரோடு சாலையை அகலப்படுத்தும் பணியை சேலம், நபாா்டு கிராமச்சாலைகள், நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளா் அருள்மொழி தலைமையிலான குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வின்போது, நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம், பராமரிப்பு) கோட்டப் பொறியாளா் திருகுணா, சேலம், நபாா்டு கிராமச்சாலைகள், நெடுஞ்சாலை கண்காணிப்பு உதவி பொறியாளா் பரிமளா, நாமக்கல் நெடுஞ்சாலை தரக்கட்டுப்பாட்டு உட்கோட்ட உதவி கோட்டப் பொறியாளா் சோமேஸ்வரி, ராசிபுரம் கட்டுமானம், பராமரிப்பு உதவி கோட்டப்பொறியாளா் ஜெகதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்று, தாா்சாலைகள், சாலைகளின் தடிமன், பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

SCROLL FOR NEXT