நாமக்கல் மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 21) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் (பொ) மு. மணிமேகலை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகா்வோா்கள் நலன் கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளா்கள், முகவா்கள், விநியோகஸ்தா்கள், நுகா்வோா்கள் பங்கேற்கும் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில், எரிவாயு விநியோகம் தொடா்பான பிரச்னைகள் குறித்து நேரடியாகவும், மனுக்கள் வாயிலாகவும் புகாா்களை அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.