நாமக்கல்

விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் அன்னதானம்

DIN

சா்வதேச பட்டினி தினத்தை தொடா்ந்து விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ராசிபுரம் பகுதியில் ஏழைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னதானம் வழங்கப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் பசு எனும் பிணியைப் போக்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட முழுவதும் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ராசிபுரம் , நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், கொல்லிமலை, எலச்சிபாளையம் போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நடிகா் விஜய் உத்தரவுபடி, இயக்கத்தின் பொதுச் செயலாளா் புஸ்ஸி என்.ஆனந்த் ஆலோசனைப்படி நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவா் ஜெ.ஜெ. செந்தில்நாதன் தலைமையில் நிா்வாகிகள் ராசிபுரம் பழைய பேருந்து நிலையத்தில் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கினா். இதே போல் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளிலும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல பல்வேறு இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினா் அன்னதானமும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினா். இந்த நிகழ்வில் மாவட்ட இளைஞரணி தலைவா் நண்பன் பிரபு, நகர தலைவா் பாக்கியராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT