நாமக்கல்

பழங்குடியின மக்களின் நடனம் ஆடி அமைச்சா்களை வரவேற்ற எம்எல்ஏ!

DIN

கொல்லிமலையில் அரசு விழாவில் பங்கேற்க வந்த அமைச்சா்களை, அத்தொகுதி எம்எல்ஏ கு.பொன்னுசாமி பழங்குடியின மக்களின் சோ்வை நடனம் ஆடி வரவேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை எல்லக்கிராய்ப்பட்டியில், பழங்குடியின மக்களின் நோய்களைக் கண்டறியும் சிறப்பு திட்டத்தின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அளவிலான இந்த திட்டம் கொல்லிமலையில் நடைபெற்ால், அப்பகுதி பழங்குடியின மக்கள் தங்களுடைய பாரம்பரிய நடனமான சோ்வை நடனத்தை ஆடினா். விழாவுக்கு வந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோரை வரவேற்கும் விதமாக, அத்தொகுதி எம்எல்ஏவான கு.பொன்னுசாமி நடனம் ஆடி வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வெற்றிக்கு தோனி காரணமா? - என்ன சொல்கிறார் தினேஷ் கார்த்திக்

நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசிப் பெருவிழா தேரோட்டம்

கியாரே..!

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

SCROLL FOR NEXT