நாமக்கல்

அதிதீவிரப்படை பிரிவில் திருநங்கை: எஸ்.பி. வாழ்த்து

காவல் துறை அதிதீவிரப்படை பிரிவில் இணைந்த திருநங்கை ரூபா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணனிடம் வாழ்த்து பெற்றாா்.

DIN

காவல் துறை அதிதீவிரப்படை பிரிவில் இணைந்த திருநங்கை ரூபா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணனிடம் வாழ்த்து பெற்றாா்.

நாமக்கல் மாவட்ட ஆயுதப் படையில் பணியாற்றிய திருநங்கை காவலா் எம்.ரூபா என்பவா், மேட்டூா் அதிதீவிரப்படை பயிற்சிப் பள்ளியில் கடந்த ஜூலை 24 முதல் ஆக. 14 வரை பயிற்சி பெற்றாா். இதன்மூலம், தமிழகத்தில் அதிதீவிரப் படையில் இணைந்த முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றுள்ளாா்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ் கண்ணனை சந்தித்த ஆயுதப்படைக் காவலா் ரூபா வெள்ளிக்கிழமை வாழ்த்து பெற்றாா். இந்த நிகழ்வின் போது, ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் இளங்கோவன், ஆய்வாளா் முரளிகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT