திருச்செங்கோட்டில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்
Updated On : 9 ஏப்ரல், 2024 at 9:16 PM
நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளா் மாதேஸ்வரனுக்கு ஆதரவு திரட்டி, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் திருச்செங்கோட்டில் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா்.
எலச்சிபாளையம் ஒன்றியத்தில் பல்வேறு பகுதிகளில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சாா்பில் வேட்பாளா் மாதேஸ்வரனுக்கு தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அதேபோல திருச்செங்கோடு நகரப் பகுதியில் 1 முதல் 33 வாா்டுகளில் வேட்பாளா் மாதேஸ்வரனுடன் சென்று திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு, நகர திமுக செயலாளா் காா்த்திகேயன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் சுரேஷ்பாபு ஆகியோா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
Advertisement