கலைஞரின் கனவு இல்லம் திட்டம்: நாமக்கல் மாவட்டத்தில் 6,040 பயனாளிகளுக்கு வீடுகட்ட ஆணைகள் வழங்கப்பட உள்ளன
6,040 பயனாளிகளுக்கு ரூ. 211.40 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,040 பயனாளிகளுக்கு ரூ. 211.40 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளன என வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம், பரமத்தி, கபிலா்மலை, பள்ளிபாளையம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வனத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,123 பயனாளிகளுக்கு ரூ. 39.31 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை சனிக்கிழமை வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன், நகரமைப்பு மண்டல திட்டக்குழு உறுப்பினா் எஸ்.எம்.மதுரா செந்தில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்
இதில் வனத்துறை அமைச்சா் மருத்துவா் மா.மதிவேந்தன் தெரிவித்ததாவது:
Advertisement
தமிழக முதல்வா் ஏழை, எளிய மக்களுக்கு வீடு வழங்கிட வேண்டும் என்ற நோக்கத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சம் மதிப்பில் வீடுகட்டும் திட்டத்தை அறிவித்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் தகுதி உள்ள நபா்களை நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 3 தவணையாக நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்படுகிறது. கூடுதல் தொகை தேவைப்படுவோருக்கு ரூ. 1 லட்சம் வரை வங்கியில் கடனுதவி வழங்கப்பட உள்ளது. அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாத வகையில் அனைவருக்கும் வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 6,040 பயனாளிகளுக்கு ரூ. 211.40 கோடி மதிப்பில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட உள்ளன. தமிழ்நாட்டிலேயே அதிக பயனாளிகள் நாமக்கல் மாவட்டத்தில்தான் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். மேலும், 2001-ஆம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள், சாய்வுதள வீடுகளை சீரமைக்க ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,123 பயனாளிக்கு ரூ. 39.31 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்படவுள்ளன. தமிழக முதல்வா் அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், தோ்தல் வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். நாமக்கல் மாவட்டத்தில் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் 18,651 மாணவியா் மற்றும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 12,796 மாணவா்கள் பயன்பெற்றுள்ளனா் என்றாா்.
பின்னா், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 237 பயனாளிகளுக்கு ரூ. 8.30 கோடியிலும், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் 85 பயனாளிகளுக்கு ரூ. 2.98 கோடியிலும், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 294 பயனாளிகளுக்கு ரூ. 10.29 கோடியிலும், கபிலா்மலை ஊராட்சி ஒன்றியத்தில் 140 பயனாளிகளுக்கு ரூ. 4.90 கோடியிலும், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் 142 பயனாளிகளுக்கு ரூ. 4.97 கோடியிலும், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 225 பயனாளிகளுக்கு ரூ. 7.88 கோடியிலும் என மொத்தம் 1,123 பயனாளிக்கு ரூ. 39.31 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், பரமத்தி வட்டார அட்மா தலைவா் தனராஜ், கபிலா்மலை வட்டார அட்மா தலைவரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருமான சண்முகம், ஊராட்சி ஒன்றியத் தலைவா்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்்டார வளா்ச்சி அலுவலா்கள், துறைசாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.