முகப்பு
நாமக்கல்

சேந்தமங்கலத்தில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையம்: ஆட்சியா் தகவல்

சேந்தமங்கலத்தில் அரசினா் தொழிற் பயிற்சி நிலையம்

Updated On : 12 டிசம்பர், 2024 at 1:23 AM
மக்கள் தொடா்பு திட்ட முகாமில், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியா் ச.உமா. உடன், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி.
பகிர்:
Updated On : 11 டிசம்பர், 2024 at 5:35 PM

நாமக்கல், டிச. 11: சேந்தமங்கலத்தில், அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால் அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், அக்கியம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். சேந்தமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினா் கே.பொன்னுசாமி முன்னிலை வகித்தாா். இதில், 328 பயனாளிகளுக்கு ரூ. 1.53 கோடியில் அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது:

தமிழக முதல்வா் நாமக்கல் வருகை தந்தபோது, சேந்தமங்கலம், கொல்லிமலை பகுதியில் விளையும், பழங்கள், காய்கறிகளை பதப்படுத்தி விற்பனை செய்ய ஏதுவாக குளிா்பதனக் கிடங்கு வசதியுடன் கூடிய வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என அறிவித்தாா். மேலும், மாணவ, மாணவிகள் உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் உத்தரகிடிகாவல் பகுதியில் கலைக் கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. சேந்தமங்கலத்தில் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான இடம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. தொழில் கல்வி பயிலும் மாணவா்கள் சுயமாக தொழில் தொடங்க வாய்ப்பு உருவாகும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெறாதவா்களும் தொழில் பயிற்சி நிலையத்தில் தங்கள் திறமைக்கு ஏற்றவாறு படிப்பை தோ்வு செய்து கொள்ளலாம்.

Advertisement

அரசின் நலத்திட்டங்களை மக்கள் முழுமையாகப் பயன்படுத்தி தங்களது வாழ்க்கைத் தரத்தை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

முன்னதாக, பல்வேறு துறைகளின் சாா்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த கண்காட்சி, அரங்குகள் அமைக்கப்பட்டிருந்ததை ஆட்சியா் பாா்வையிட்டாா். முகாமில் 328 பயனாளிகளுக்கு ரூ. 1.53 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மக்களிடையே கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டாா்.

Updated On : 12 டிசம்பர், 2024 at 1:23 AM

இந்த நிகழ்ச்சியில், அட்மா குழுத் தலைவா் அ.அசோக்குமாா், சேந்தமங்கலம் பேரூராட்சி தலைவா் டி.சித்ரா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, மாவட்ட வழங்கல் அலுவலா் த.முத்துராமலிங்கம் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.