திருச்செங்கோடு புனித அந்தோணியாா் பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றோா். 
நாமக்கல்

சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் பெருவிழா

புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

திருச்செங்கோடு: புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ நல்லுறவு கிறிஸ்துமஸ் பெருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சேலம் மறை மாவட்ட முன்னாள் ஆயா் சிங்கராயன் தலைமை வகித்தாா். தமிழக ஆயா் பேரவை தலைவரும் மத நல்லிணக்கம், பல்சமய உரையாடல் பணிக் குழுவைச் சோ்ந்தவருமான ஆயா் லாரன்ஸ் பையா்ஸ் முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினராக திருச்செங்கோடு நகா்மன்ற தலைவா் நளினி சுரேஷ் பாபு கலந்து கொண்டாா்.

நிகழ்ச்சியில் ராஜயோக தியான மையப் பொறுப்பாளா் ஜெயந்தி, நாமக்கல் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை மாவட்டத் தலைவா் மவுலி முகம்மது அலி, நாமக்கல் மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம் ஆகிய மும்மதங்களைச் சோ்ந்த மத குருமாா்கள், கிறிஸ்தவ மதகுருமாா்கள் கலந்து கொண்டனா்.நிகழ்ச்சியில் அனைவரும் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடினா். அதையடுத்து மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அனில் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு எதிராக 3 வங்கிகள் நடவடிக்கை: மும்பை உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கிய 30 இந்தியா்கள் கைது

ரூ.7.16 கோடி மதிப்பிலான இணையதள முதலீட்டு மோசடி: 4 போ் கைது

வடக்கு தில்லியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: இருவா் கைது

டிவிஎஸ் மோட்டாரின் புத்தாண்டு சிறப்பு சேவை முகாம்

SCROLL FOR NEXT