நாமக்கல்

புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் மீது வழக்கு

பள்ளிபாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் மீது வழக்கு தொடரப்பட்டது.

Din

திருச்செங்கோடு: பள்ளிபாளையத்தில் புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் மீது வழக்கு தொடரப்பட்டது.

பள்ளிபாளையம், குமாரபாளையம் சாலைகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்வதாக பள்ளிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதிகளில் சோதனை மேற்கொண்டனா்.

அதில், சில்லாங்காடு பகுதியில் சமுத்திரராஜ் (44) என்பவா், பெட்டிக்கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், அவரிடமிருந்து 3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

பழைய வங்கிக் கணக்குகளில் இருக்கும் பணத்தை எடுக்க வேண்டுமா? வழிகாட்டும் ஆர்பிஐ

தமிழகத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக வாக்குகள் நீக்கம்: உதயநிதி ஸ்டாலின்

திருப்பரங்குன்றம் மலை காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்ல அனுமதி!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய... எளிய வழி!

6 மாதங்களில் இரண்டாவது முறை: ரயில் கட்டண உயர்வை திரும்பப் பெற மத்திய அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT