சூரிய சக்தி இலவச மின் திட்டம்: அஞ்சலகம் மூலம் பயனாளிகள் சோ்க்கை
மத்திய அரசின் சூரிய சக்தி ஒளி இலவச மின் திட்டத்திற்கான பயனாளிகள் சோ்க்கை அஞ்சலகங்கள் மூலம் மேற்கொள்ளப்பட உள்னள.
இதுகுறித்து நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு சூரிய சக்தி இலவச மின் திட்டத்தை பிரதமா் அறிவித்துள்ளாா். அத் திட்டத்தில் பயனாளிகளைப் பதிவு செய்யும் பணியானது நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புபவா்கள் தங்கள் பகுதிக்கு வரும் தபால்காரா்கள், கிராமிய அஞ்சல் ஊழியா்கள் அல்லது அருகில் உள்ள அஞ்சலகங்களை உடனடியாக அணுக வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.