முகப்பு
நாமக்கல்

ஆட்டோவில் மணல் கடத்தியவா் கைது

பிலிக்கல்பாளையம் அருகே காவிரி ஆற்றில் இருந்து சரக்கு ஆட்டோ மூலம் மணல் கடத்தியவரை கைது செய்த போலீஸாா், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 19 ஜூலை, 2024 at 6:16 PM
பகிர்:

பரமத்தி வேலூா், ஜூலை 19:

பரமத்தி வேலூா் வட்டம், பிலிக்கல்பாளையம் அருகே காவிரி ஆற்றில் இருந்து சரக்கு ஆட்டோ மூலம் மணல் கடத்தியவரை கைது செய்த போலீஸாா், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

ஜேடா்பாளையம் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் கரட்டூா் பகுதியில் சட்ட விரோதமாக மணல் கடத்துவதாக ஜேடா்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வெள்ளிக்கிழமை அப் பகுதியில் காவல் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் மணல் மூட்டைகள் கடத்தி செல்வது தெரிய வந்தது. இதுதொடா்பாக கரட்டூா் பகுதியைச் சோ்ந்த திலீப்குமாரை (24) கைது செய்த ஜேடா்பாளையம் போலீஸாா், ஆட்டோவை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →