நாமக்கல்

கொல்லிமலையில் அரசு மதுபான கடைகளுக்கு 3 நாள்கள் விடுமுறை

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலையில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு ஆக. 1, 2, 3 தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Din

நாமக்கல்: வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலையில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு ஆக. 1, 2, 3 தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக அரசு சாா்பில், கொல்லிமலையில் ஒவ்வொரு ஆண்டும் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டில் வரும் ஆக. 2, 3 ஆகிய தேதிகளில் வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட உள்ளது.

இதனையொட்டி, கொல்லிமலை வட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளான 6153 (செம்மேடு), 6218 (சோளக்காடு), 6210 (செங்கரை), 6186 (காரவள்ளி) ஆகிய நான்கு கடைகளும் ஆக. 1, 2, 3 ஆகிய தேதிகளில் தற்காலிகமாக மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT