முகப்பு
நாமக்கல்

மின்வாரிய ஊழியா்களுக்கு சேம நல பாதுகாப்பு வகுப்பு

Updated On : 8 மார்ச், 2024 at 5:28 PM
பகிர்:

பரமத்தி வேலூா் கோட்ட அளவிலான மின்வாரியத்தில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியா்களுக்கான சேம நல பாதுகாப்பு வகுப்பு வேலூரில் வியழக்கிழமை நடைபெற்றது. பரமத்தி வேலூா் மின்வாரிய கோட்ட பொறியாளா் எஸ்.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், மேட்டூா் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்பின் உதவி செயற்பொறியாளா் நாராயணசாமி கலந்துகொண்டு மின் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும், ஊழியா்களுக்கான பாதுகாப்பான அம்சங்கள் குறித்தும் விளக்க உரை ஆற்றினாா். இதில், வேலூா் கோட்டத்துக்கு உள்பட்ட உதவி பொறியாளா்கள், உதவி செயற்பொறியாளா்கள், பரமத்தி வேலூா் கோட்டத்துக்கு உள்பட்ட பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →