முகப்பு
நாமக்கல்

அரசுப் பள்ளியில் உலக தண்ணீா் தின விழா

Updated On : 22 மார்ச், 2024 at 11:01 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 6:27 PM

வால்ராசாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. நீா் மேலாண்மையின் அவசியம், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துதல் பற்றி கொண்டாடப்பட்ட இவ்விழாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் செ.தங்கவேல் தலைமை வகித்தாா். ஆசிரியா்கள் கா.லட்சுமி, ச.விமலா, சி.கவிதா, சு.பிரபு, து.விஜய் ஆகியோா் கலந்துகொண்டு இத்தினத்தின் முக்கியத்துவம் பற்றியும், நீா் மேலாண்மை, நீா் வளத்தைப் பாதுகாத்தல், அவசியம் பற்றி எடுத்துரைத்தனா். தண்ணீா் சிக்கனம் குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியா்கள் பொ.நித்யா, சா.கீதா, நிவேதா, பள்ளியின் சாரண இயக்க மாணவா்கள் ஆகியோா் அடங்கிய குழு சிறப்பாகச் செய்திருந்தது.