வரும் நாள்களில் கோடை வெயிலின் தாக்கம் 104 டிகிரியை தாண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். காற்று மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் தென் கிழக்கில் இருந்து வீசக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 101.3 டிகிரியும், குறைந்தபட்சம் 60.8 டிகிரியுமாக காணப்படும். வரும் நாள்களில் பகலில் வெயிலின் தாக்கம் 104 டிகிரியாகவும், இரவு வெப்பம் 77 டிகிரியாகவும் காணப்படும்.
பண்ணையாளா்களுக்கான ஆலோசனை:
காற்றின் வேகம் குறைவதால், கோழிகளுக்கு அதிகளவில் வெப்ப அயற்சி ஏற்படும். எனவே, கோழிகள் உட்கொள்ளும் நீரின் அளவை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.