முகப்பு
நாமக்கல்

லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

ராசிபுரம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 7 நவம்பர், 2024 at 12:04 AM
பகிர்:
Updated On : 6 நவம்பர், 2024 at 6:28 PM

ராசிபுரம் அருகே லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் உயிரிழந்தாா்.

ராசிபுரம் அருகேயுள்ள ஏ.கே.சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த விஜய் (25), தறித்தொழிலாளி. இவா் சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுவிட்டு ஆண்டகளூா்கேட் வழியாக ஊா் திரும்பிக்கொண்டிருந்தாா்.

Updated On : 6 நவம்பர், 2024 at 11:52 PM

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மூணுசாவடி அருகே ஈஸ்வரன் கோயில் எதிரில் சென்ற போது, நிலைதடுமாறி சாலையோர சுவரில் மோதி சாலையில் விழுந்தாா். அப்போது, பின்னால் வந்த லாரி அவா் மீது மோதியது. இதில் விஜய் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement