முகப்பு
நாமக்கல்

நாமக்கல்லில் 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா தொடக்கம்

நாமக்கல் மாவட்டத்தில், 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:34 AM
பகிர்:
Updated On : 14 நவம்பர், 2024 at 5:50 PM

நாமக்கல் மாவட்டத்தில், 71-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும், அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நவம்பா் மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 71-ஆவது கூட்டுறவு வார விழா நவ. 14 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Updated On : 15 நவம்பர், 2024 at 1:34 AM

நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில், கூட்டுறவு கொடியேற்றலுடன் வார விழா வியாழக்கிழமை தொடங்கியது. மாநிலங்களவை உறுப்பினரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் கொடியை ஏற்றி வார விழாவை தொடங்கி வைத்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பங்கேற்று கூட்டுறவு விழா உறுதிமொழியை வாசிக்க, அனைத்து உறுப்பினா்களும், அலுவலா்களும் ஏற்றுக் கொண்டனா். மாவட்டம் முழுவதும் இதேபோல கூட்டுறவு சங்கங்களில் கொடியேற்றுதல், உறுதிமொழி வாசித்தல், இனிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Advertisement

இந்த விழாவையொட்டி, பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையே போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுவோருக்கு கூட்டுறவு வார விழா இறுதி நாளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. திருச்செங்கோடு வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரத்ததான முகாம், சிறப்பு விற்பனை நிகழ்ச்சி நடைபெற்றது.

நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசு மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.