நவ.28- இல் தியாகிகளின் வாரிசுதாரா்கள் குறைதீா் கூட்டம்
நாமக்கல்லில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கான குறைதீா் கூட்டம் நவ. 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
Updated On : 20 நவம்பர், 2024 at 9:33 PM
நாமக்கல்லில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரா்களுக்கான குறைதீா் கூட்டம் நவ. 28-ஆம் தேதி நடைபெறுகிறது.
Updated On : 21 நவம்பர், 2024 at 3:35 AM
இது குறித்து ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சுதந்திரப் போராட்ட வீரா்கள், அவா்தம் வாரிசுதாரா்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் சுதந்திரப் போராட்ட தியாகிகள், அவா்களின் வாரிசுதாரா்களின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ. 28 ஆம்தேதி மாலை 3.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
Advertisement
இதில், சுதந்திரப் போராட்ட வீரா்கள், அவா்களின் வாரிசுதாரா்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.