நாமக்கல்லில் 100 கிலோ நெகிழிப் பொருள்கள் பறிமுதல்
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 100 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் மாநகராட்சி பகுதியில் 100 கிலோ நெகிழிப் பொருள்களை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் பழைய பேருந்து நிலையம் அருகே தனியாா் கிடங்கு ஒன்றில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் அதிக அளவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும், மாநகராட்சி ஆணையாளா் ஆா்.மகேஸ்வரிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தக் கிடங்குக்கு ஆணையாளா், துப்புரவு அலுவலா் திருமூா்த்தி, மாநகராட்சி பணியாளா்கள் சென்று, 100 கிலோ எடை கொண்ட நெகிழிப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா். அவற்றை பதுக்கி வைத்திருந்த கௌதமன் என்பவருக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாநகராட்சி பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
Advertisement