முகப்பு
நாமக்கல்

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடம் ஆய்வு

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:03 AM
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் இடத்தை ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 27 நவம்பர், 2024 at 7:32 PM

ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அணைப்பாளையம் பகுதியில் ரூ. 10.58 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

ராசிபுரம் நகராட்சி ஆணையா் சு.கணேசன், உதவிப் பொறியாளா் ஏ.ரவி, நகர அமைப்பு அலுவலா் சி.ராஜேந்திரன் ஆகியோருடன் பேருந்து நிலையம் அமையவுள்ள அணைப்பாளையம் பகுதிக்கு நேரில் சென்று பேருந்து நிலையம், சாலைகள், வணிக வளாகம், சுகாதார வளாகம் போன்றவை அமையவுள்ள இடத்தை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 28 நவம்பர், 2024 at 12:03 AM

இதனைத் தொடா்ந்து, ராசிபுரம் பழைய பேருந்து நிலையப் பகுதியில் கலைஞா் நகா் புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 5.86 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஈரடுக்கு வணிக வளாகம், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவற்றின் பணிகளையும் அவா் ஆய்வு செய்தாா். பின்னா் பிற்படுத்தப்பட்டோா் காலனி அருகே மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் ரூ. 1.28 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொண்டு இப்பணிகளை தரமாகவும், விரைந்தும் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

Advertisement