அதிமுக கட்சியின் 53-ஆம் ஆண்டு தொடக்க விழா
அதிமுக கட்சியின் 53-ஆவது ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சிகள் திருச்செங்கோடு நகரின் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
அதிமுக கட்சியின் 53-ஆவது ஆண்டு தொடக்க நாள் நிகழ்ச்சிகள் திருச்செங்கோடு நகரின் பல்வேறு பகுதிகளில் கட்சிக் கொடியேற்றி கொண்டாடப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் 53-ஆவது ஆண்டு தொடக்க நாளை கொண்டாடும் விதமாக கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவின் பேரில் நகரின் பல்வேறு பகுதிகளில் வாா்டு செயலாளா்கள் தலைமையில் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினா்.
சட்டையம்புதூா் பகுதியில் வாா்டு செயலாளா் சரவணக்குமாா் தலைமையில், முன்னாள் நகர துணைச் செயலாளா் திருஞானம், நகர மாணவரணி பொருளாளா் சக்திவேல் முன்னிலையில் கட்சி தொடக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Advertisement
கட்சிக் கொடியை மூத்த உறுப்பினா் நாட்ராயன் ஏற்றி வைத்தாா். எம்ஜிஆா், ஜெயலலிதா, அண்ணா படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும், நலிந்த கட்சியினருக்கு நிவாரணப் பொருள்களையும் வழங்கினா். விழாவில் கட்சியின் வாா்டு பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.