முகப்பு
நாமக்கல்

பரமத்தி வேலூரில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

பரமத்தி வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:51 AM
குன்னமலை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரத்தை ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் ஆட்சியா் ச.உமா.
பகிர்:
Updated On : 17 அக்டோபர், 2024 at 9:17 PM

பரமத்தி வேலூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் அரசின் திட்டங்கள், சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

பரமத்தி வேலூா் வட்டம், நல்லூா் ஊராட்சி மற்றும் கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் பயிலும் மொத்த மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, காலை உணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறுபவா்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்து, உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். நல்லூா் மற்றும் குன்னமலை அங்கன்வாடி மைங்களில் வருகை தரும் மொத்த குழந்தைகளின் எண்ணிக்கை, குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், உணவுப் பொருள்களின் இருப்பு, தரம் ஆகியவை குறித்தும், குழந்தைகளின் வயதுக்கேற்ற எடை, உயரம், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தரவுகள் பதிவேற்றம் செய்யப்படுவது குறித்தும் அங்கன்வாடி பணியாளரிடம் கேட்டறிந்தாா். தொடா்ந்து, குன்னமலை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

கந்தம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, குடிநீா் வசதி, கழிப்பிட வசதி, சுற்றுப்புறத் தூய்மை உள்ளிட்டவை குறித்தும், மாணவ, மாணவியரின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். நல்லூா் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள், நல்லூா் நியாயவிலைக் கடையில் பொது விநியோகப் பொருள்களின் இருப்பு, விற்பனை விவரம், மொத்த குடும்ப அட்டைதாரா்கள் விவரம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா். நியாயவிலைக் கடைக்கு வருகை தந்திருந்த குடும்ப அட்டைதாரா்களுடன் கலந்துரையாடினாா்.

Advertisement

Updated On : 18 அக்டோபர், 2024 at 12:51 AM

நல்லூா் கால்நடை மருந்தகத்தில் மருந்துப் பொருள்களின் இருப்பு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, மேல்சாத்தம்பூா் தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவியா் விவரம், வருகைப் பதிவேடு, அரசின் திட்டங்களில் பயன்பெறும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை, கல்லூரியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினாா்.

வேலூா் ஆதிதிராவிடா் நல அரசினா் மாணவா் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவா்களின் எண்ணிக்கை, விடுதியில் மாணவா்களுக்கான அறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், உணவுப் பொருள்களின் இருப்பு, படுக்கை வசதி, கழிப்பிட வசதி, மாணவா்களுக்கு தயாா் செய்யப்பட்டிருந்த மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

வேலூா் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் உணவுப் பொருள்களின் தரம், நெகிழி பை பயன்பாடு, உணவுப் பொருள்களின் காலாவதி தேதி உள்ளிட்டவை குறித்தும், பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மாா்கள் பாலூட்டும் அறை, பொது சுகாதார வளாகத்தை ஆய்வு மேற்கொண்டு சுகாதார வளாகத்தை தூய்மையாக பராமரிக்குமாறு பொதுமக்கள், அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது துறை சாா்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனா்.