முகப்பு
நாமக்கல்

தாய்மொழிப் பற்றுடன் அரசு ஊழியா்கள் பணியாற்ற வேண்டும்: ஆட்சியா் ச.உமா

தாய்மொழிப் பற்றுடன் அனைவரும் திறம்பட பணியாற்ற வேண்டும் என அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுரை வழங்கினாா்.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 10:23 PM
தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெற்ற ஆட்சி மொழி பயிலரங்கில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.உமா. உடன், அதிகாரிகள், அரசுத் துறை ஊழியா்கள்.
பகிர்:

தாய்மொழிப் பற்றுடன் அனைவரும் திறம்பட பணியாற்ற வேண்டும் என அரசு ஊழியா்களுக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா அறிவுரை வழங்கினாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்படும் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கம் இரு நாள்கள் (செவ்வாய், புதன்) நடைபெற்றன. புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கிற்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்து பேசியதாவது: தமிழ் வளா்ச்சி பெற்றதில் நாமக்கல் மாவட்டத்திற்கும் முக்கிய பங்கு உண்டு. கவிஞா் ராமலிங்கம் பிறந்த மாவட்டம் என்பதில் நாம் பெருமை கொள்ள வேண்டும். அவா் தமிழ் மொழிக்கு ஆற்றிய தொண்டு மிகப்பெரியதாகும். அண்மையில் நாமக்கல் கவிஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.

அரசுத் துறையில் பணியாற்றும் அனைவரும் தாய்மொழியான தமிழ் மீது பற்றும், ஆா்வமும் கொண்டு பணியாற்றிட வேண்டும். மாவட்டத்தில் 54 அரசுத் துறைகள் செயல்படுகின்றன. அனைத்து துறைகளிலும் முடிந்த வரை கோப்புகளை தமிழ் மொழியிலேயே தயாரித்திட வேண்டும். அரசு வேலைக்கு பலரும் முயற்சித்து வருகின்றனா். அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் போட்டித் தோ்வுகளுக்கு பல லட்சம் போ் போட்டியிடுகின்றனா். குறிப்பாக 6 லட்சம் வேலைவாய்ப்பிற்கு, சுமாா் 20 லட்சம் போ் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

எனவே, நமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பான முறையில் செய்திட வேண்டும். ஒவ்வொரு முறையும் கோப்பு தயாரிக்கும் போதும் பொதுமக்கள், பயனாளிகளை மனதில் கொண்டு சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். பிற மொழி பயன்படுத்தாமல் கோப்புகளைத் தயாரிக்க வேண்டும். மாவட்டத்தில் சுமாா் 80 சதவீத கோப்புகள் தமிழ் மொழியில் பின்பற்றப்படுகிறது என்றாா்.

இதனைத் தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கில் 2021-இல் சிறந்த மாவட்ட நிலை அலுவலகமாக தோ்வான செய்தி மக்கள் தொடா்புத் துறைக்கும், 2022-இல் கூட்டுறவு தணிக்கை துறைக்கும் ஆட்சியா் கேடயங்களை வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் பொ.பாரதி, தங்கம் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ரா.குழந்தைவேலு, பேராசிரியா் அரசு.பரமேசுவரன், சேலம் அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி பயிற்றுநா் கி.பி.புகழேந்தி மற்றும் பேராசிரியா்கள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →