பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி
விழிப்புணா்வுப் பேரணியில் கலந்துகொண்ட மின்வாரிய அலுவலா்கள், தொழிலாளா்கள்.
பரமத்தி வேலூா் மின் பகிா்மான வட்டத்தில் மின்சார சிக்கனம் குறித்த விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழிப்புணா்வுப் பேரணிக்கு செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தலைமை வகித்தாா். உதவி செயற்பொறியாளா்கள் ராஜா, மாலதி, சரவணன், ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி பொறியாளா்கள், அலுவலகா்கள், பணியாளா்கள் மின் சிக்கனம், மின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி சென்று பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பேரணிக்கான ஏற்பாடுகளை வேலூா் உதவி பொறியாளா் வினோத்குமாா் செய்திருந்தாா்.