முகப்பு
நாமக்கல்

மக்கள் குறைதீா் கூட்டம்: 572 மனுக்கள் அளிப்பு

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 டிசம்பர், 2025 at 7:36 PM
மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் துா்காமூா்த்தி.
பகிர்:

நாமக்கல்: நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், முதியோா், விதவையா், கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 572 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா். அந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி அவற்றின்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, தாட்கோ சாா்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நல வாரியத்தின் மூலம் ரூ. 90,500 மதிப்பில் 22 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஒரு பயனாளிக்கு இயற்கை மரண உதவித்தொகை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி.) சு.சுந்தரராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →