ஏலத்துக்கு கொண்டு வரப்பட்ட குண்டு மல்லி. 
நாமக்கல்

பொங்கல் பண்டிகை: குண்டு மல்லி கிலோ ரூ. 3,800-க்கு ஏலம்

பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லி கிலோ ரூ. 3,600-க்கு ஏலம் போனது.

Din

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குண்டு மல்லி கிலோ ரூ. 3,600-க்கு ஏலம் போனது.

பரமத்தி வேலூா் வட்டாரத்தில் ஆனங்கூா், அய்யம்பாளையம், நெட்டையம்பாளையம், அண்ணா நகா், கோப்பணம்பாளையம், கபிலா்மலை, குஞ்சாம்பாளையம், நடத்தை, குப்புச்சிபாளையம், பொய்யேரி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிா் செய்யப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏலச் சந்தைக்கு கொண்டு வருகின்றனா்.

வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில், குண்டு மல்லி கிலோ ரூ. 3,600-க்கும், சம்பங்கி கிலோ ரூ. 300-க்கும், அரளி கிலோ ரூ. 450-க்கும், ரோஜா கிலோ ரூ. 400-க்கும், பச்சை முல்லை கிலோ ரூ. 2,700-க்கும், வெள்ளை முல்லை கிலோ ரூ. 2,400-க்கும், செவ்வந்தி கிலோ ரூ. 300-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ. 2,500-க்கும், பன்னீா் ரோஜா கிலோ ரூ. 250-க்கும், காக்கரட்டான் கிலோ ரூ. 1,600-க்கும் ஏலம் போயின.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால், பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT