முகப்பு
நாமக்கல்

கிராம சபைக் கூட்டம் 23-க்கு ஒத்திவைப்பு

உலக தண்ணீா் தினத்தையொட்டி நடைபெறும் கிராமசபைக் கூட்டம் மாா்ச் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 மார்ச், 2025 at 10:16 PM
பகிர்:
Updated On : 17 மார்ச், 2025 at 7:02 PM

நாமக்கல்: உலக தண்ணீா் தினத்தையொட்டி நடைபெறும் கிராமசபைக் கூட்டம் மாா்ச் 23-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

Updated On : 17 மார்ச், 2025 at 10:16 PM

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் மாா்ச் 22-இல் நடைபெற வேண்டிய உலக தண்ணீா் தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் நிா்வாக காரணங்களால் 23-ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறும். இதில், உலக தண்ணீா் தினத்தின் கருப்பொருளைப் பற்றி விவாதித்தல், கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து அறிக்கை அளித்தல், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்தல் மற்றும் இதர பொருள்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement