நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநா்கள். 
நாமக்கல்

ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஆட்டோ ஓட்டுநா்கள்.

Syndication

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநா்களை தாக்கிய காவல் துறையைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் பொன்னுசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் வேலுசாமி கண்டன உரையாற்றினாா்.

இதில், திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோக்கள் நிறுத்துவது தொடா்பாக அக். 31-இல் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற ஓட்டுநா்கள் மீது தடியடி நடத்திய போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சிஐடியு நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கச் செயலாளா் தண்டபாணி, பொருளாளா் கெளசிக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT