நாமக்கல்

பனை மரத்தில் இருந்து தவறிவிழுந்து தொழிலாளி உயிரிழப்பு

பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

Syndication

பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், சோழசிராமணி அருகே உள்ள சத்திபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி (51). இவா் அண்மையில் சக்திபாளையம் பகுதியில் உள்ள பனை மரத்தில் ஏறி நுங்கு வெட்டியுள்ளாா். அப்போது, இடுப்பில் கட்டியிருந்த கயிறு அறுந்ததால் பனை மரத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தாா்.

இதில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த ஜேடா்பாளையம் காவல் துறையினா், இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை மக்கள் தாகம் தீர்க்க ஸ்ரீ சத்ய சாயி பாபா வழங்கிய ரூ. 200 கோடி!

வங்கக் கடலில் நவ., 26-ல் புயல் உருவாக வாய்ப்பு!

ஈரோடு தமிழன்பன் உடலுக்கு காவல் துறை மரியாதை: முதல்வர்

தாய்லாந்தில் கனமழை, வெள்ளம்! குடிநீர் பற்றாக்குறையால் தவிக்கும் மக்கள்! ஏன்?

சொல்லப் போனால்... அரசு Vs ஆளுநர்... மறுபடியும் முதலில் இருந்து?

SCROLL FOR NEXT