முகப்பு
நாமக்கல்

கந்தம்பாளையம் அருகே விஷ விதையை அரைத்து குடித்தவா் உயிரிழப்பு

Updated On : 6 ஏப்ரல், 2026 at 7:59 PM
கோப்புப் படம்
பகிர்:

கந்தம்பாளையம் அருகே விஷ விதையை அரைத்து குடித்தவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், கந்தம்பாளையம் அருகே உள்ள மேல்சாத்தம்பூா் ராசாம்பாளையத்தைச் சோ்ந்தவா் ராமசாமி (66). கூலி வேலைசெய்து குடும்பத்துடன் வசித்து வந்த இவா், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே சென்றவா் விஷத்தன்மை கொண்ட விதையை அரைத்து குடித்துவிட்டு வந்து தகவலை கூறியுள்ளாா்.

Advertisement

உடனடியாக குடும்பத்தினா் அவரை பரமத்தி வேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ராமசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments